நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உப்சி மாணவர்களை உட்படுத்திய சாலை விபத்து குறித்த உள்ளடக்கங்களைப் பகிர்வதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும்

கோலாலம்பூர்: 

கிரிக் சாலையில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் 15 உப்சி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இன்னும் சிலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், இந்த விபத்து குறித்த உள்ளடக்கங்களை வெளியிடும் அல்லது காணொலிகளைப்  பகிரும் சமூக ஊடக பயனர்கள், உள்ளடக்க தயாரிப்பாளர்கள் ஊடக மாண்பினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார். 

பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். அதே வேளையில் குடும்ப உறுப்பினர்களின் தனிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

போலீஸ் தரப்பும் அவர்களின் விசாரணைகளை மேற்கொண்டு வருவதால் விபத்து குறித்து எந்தவொரு கருத்துகளை வெளியிட்டாலும் அது விசாரணைக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார். 

முன்னதாக, தியாகத்திருநாள் கொண்டாட்டத்தை முடித்து விட்டு உப்சி பல்கலைக்கழகத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இந்த சாலை விபத்து ஏற்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset