
செய்திகள் மலேசியா
சித்ரவதை வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே லோ சியூ ஹோங்கின் கணவர் முஹம்மத் நகாஷ்வரன் முனியான்டி காலமானார்
கோலாலம்பூர்:
தனித்து வாழும் மாதுவான லோ சியூ ஹொங்கின் முன்னாள் கணவர் முஹம்மத் நகாஷ்வரன் முனியான்டி தனது 38ஆவது வயதில் காலமானார் என்று லோவின் வழக்கறிஞர் ஷம்ஷெர் சிங் உறுதிப்படுத்தினார்.
கடந்த 2020ஆம் ஆண்டு தனது மூன்று பிள்ளைகளையும் பெர்லீஸ் மாநிலத்திற்குக் கொண்டு சென்று இஸ்லாத்திற்கு மதம் மாற்றிய விவகாரம் தொடர்பாக பிள்ளைகளைப் பாதுகாக்கும் உரிமை தொடர்பான வழக்கில் அவர் எதிர்நோக்கியிருந்தார்.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த மூன்று பிள்ளைகளையும் பாதுகாக்கும் முழு உரிமையும் லோவின் கீழ் வருவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
முஹம்மத் நகாஷ்வரன் இதற்கு முன் குற்றப்பின்னணியைக் கொண்டிருந்ததாகவும் அவர் கிளாந்தான் மாநில சிறையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
லோவை சித்ரவதை செய்து தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் நகாஷ்வரன் மீது குற்றச்சாட்டு கடந்த ஜூலை 2023ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், தனக்கு எதிரான குற்றத்தை மறுத்த நிலையில் 10 ஆயிரம் ரிங்கிட் உடன் கூடிய ஜாமின் அளிக்கப்பட்டது. எனவே இம்மாதம் செப்டம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணை தொடங்கவிருந்த நிலையில் தற்போது லோவின் முன்னாள் கணவரான முஹம்மத் நகாஷ்வரன் முனியான்டி காலமானதாக தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்
June 12, 2025, 4:31 pm
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
June 12, 2025, 4:17 pm
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
June 12, 2025, 4:16 pm
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
June 12, 2025, 4:15 pm