
செய்திகள் மலேசியா
அன்வாருக்கு எதிரான யூசோஃப் ராவுத்தர் வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு எதிரான யூசோஃப் ராவுத்தர் வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக யூசோஃப் ராவ்தர் சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த சிவில் வழக்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதமரின் முழு தடைக்கான விண்ணப்பம் குறித்து முடிவு எடுக்கப்படும் வரை சிவில் வழக்கை நிறுத்தி வைக்க மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அன்வாரின் விண்ணப்பத்தை வழங்கியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முழு தடைக்கான விண்ணப்பத்திற்கான விசாரணை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவரான நீதிபதி சுபாங் லியான், இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2025, 12:46 pm
விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு: தரையில் படுத்து குழந்தை போல் அழுத பயணி
June 11, 2025, 11:36 am
பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்ய தடையா? உயர்க்கல்வி அமைச்சர் விளக்கம்
June 11, 2025, 10:50 am