நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டினார்: மாணவர்கள் குற்றச்சாட்டு 

ஈப்போ: 

ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டியதாக விபத்திலிருந்து தப்பிய மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக  பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோரைனி அஹமத் தெரிவித்தார். 

ஓட்டுநரிடம் மெதுவாகச் செல்லும்படி பலமுறை கூறியதாகவும் அவர் தங்களின் வேண்டுகோளைப் பொருட்படுத்தவில்லை என்று மாணவர்கள் கூறியதாக நோரைனி குறிப்பிட்டார். 

விபத்தில் தப்பிய 23 வயதான லிலி சுசானா மாட் யாகோப்பை மருத்துவமனையில் சந்தித்தப் போது அவர் தம்மிடம் இவ்வாறு கூறியதாக துணையமைச்சர் விளக்கமளித்தார். 

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் லிலியும் தனது தோழி நோர் எரிகாவும் பேருந்து மிக வேகமாக இயக்கப்பட்டதாக கூறியுள்ளனர். 

லிலி இன்னும் விபத்து நிகழ்ந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று துணையமைச்சர் குறிப்பிட்டார். 

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆலோசனை சேவைகளை வழங்கவுள்ளதாக என்று துணையமைச்சர் நோரைனி செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset