
செய்திகள் மலேசியா
வர்த்தகம், தற்காப்பு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த போலந்தும் மலேசியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
விவசாயத் துறை போன்ற பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியாவும் போலந்தும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், , சட்டவிரோத குடியேற்றம், மனித கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படவுள்ளதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், போலந்து அதிபர் Andrzej Duda இடையில் இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.
பொருளாதார வாய்ப்புகளை விரிவுப்படுத்த பல துறைகளில் இணைந்து செயல்பட இருவரும் ஒப்புக்கொண்டதைப் பிரதமர் உறுதிப்படுத்தினார்.
மலேசியா - போலந்து இடையிலான இருதரப்பு அரசத் தந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் போலந்து அதிபர் மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக டுடா நேற்று மலேசியா வந்தடைந்தார்.
2024 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் போலந்து மலேசியாவின் 8-ஆவது பெரிய வர்த்தக பங்காளியாகத் திகழ்கிறது.
மொத்த இருதரப்பு வர்த்தகம் 2023 உடன் ஒப்பிடும்போது 19.5 சதவீதம் அதிகரித்து RM5.7 பில்லியனாக இருந்தது.
போலந்திற்கான மலேசியாவின் முதன்மை ஏற்றுமதிகளில் மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், ரப்பர் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் அடங்கும்.
அதே நேரத்தில் போலந்திலிருந்து முக்கிய இறக்குமதிகள் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பாகங்கள், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் ஆகும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 11, 2025, 12:46 pm
விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு: தரையில் படுத்து குழந்தை போல் அழுத பயணி
June 11, 2025, 11:36 am
பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்ய தடையா? உயர்க்கல்வி அமைச்சர் விளக்கம்
June 11, 2025, 10:50 am