
செய்திகள் மலேசியா
நாட்டில் சொகுசுப் பொருள்களுக்கான விற்பனை வரி 5 முதல் 10 விழுக்காடு வரை உயர்த்தப்படும்
புத்ராஜெயா:
நாட்டில் சொகுசுப் பொருள்களுக்கான விற்பனை வரி 5 முதல் 10 விழுக்காடு வரை உயர்த்தப்படவுள்ளது.
மலேசியாவில் விற்பனை, சேவை வரிகளை அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து உயர்வு காணவுள்ளது.
நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதும் நிதி நிலைமையை வலுப்படுத்துவதும் இலக்குடன் இது அமலுக்கு வரும் என நிதியமைச்சு கூறியுள்ளது.
இதன் அடிப்படையில் அத்தியாவசியப் பொருள்கள் தவிர்த்து சொகுசுப் பொருள்களுக்குமான விற்பனை வரி 5 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடு வரை உயர்த்தப்படும்.
நண்டு, சால்மன் மீன், பண்டைய காலக் கலைப் படைப்புகள் போன்ற பொருட்களும் இதில் அடங்கும்.
மேலும் சேவை வரி மேலும் பல துறைகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.
வாடகைச் சொத்துகள், கட்டுமானம், நிதிச் சேவைகள், தனியார் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, அழகுப் பராமரிப்பு போன்ற துறைகளை அது உள்ளடக்கும்.
விற்பனை, சேவை வரிகள் கட்டங்கட்டமாக விரிவுப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த அக்டோபரில் வரவுசெலவுத் திட்டத்தை வெளிட்டபோது கூறியிருந்தார்.
வரிகளில் கடந்த மாதமே மாற்றங்கள் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் வர்த்தகர்களின் கோரிக்கைகளால் அது சற்று ஒத்திவைக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am