நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிரிக் விபத்து: மன்னிப்பு கோரிய பேருந்து ஓட்டுநர்

கோத்தா பாரு:

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும், விபத்தில் சிக்கிய மாணவர்களிடமும் தாம் மன்னிப்பு கோருவதாக பேருந்து ஓட்டுநர்  Mohd Amirul Fadhil Zulkifle தெரிவித்துள்ளார்.

திடீரென பிரேக் செயலிழந்ததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அவர் கூறினார். 

விபத்து தொடர்பான் விசாரணைக்கு உதவுவதற்காக ஏருந்து ஓட்டுநர் Mohd Amirul Fadhil Zulkifle-யைக் காவல்துறை கைது செய்துள்ளது.

முன்னதாக, நேற்று அதிகாலை திரெங்கானுவிலிருந்து 42 உப்சி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து பேராக், கிரிக்கில் விபத்துக்குள்ளானது. 

இதில் 14 மாணவர்களும் பேருந்து உதவியாளரும் மரணமடைந்தனர்.

பேருந்து திரெங்கானுவிலிருந்து நல்ல நிலையில் புறப்பட்டதாகவும் பேராக்,கிரிக்கிலுள்ள யானை கடக்கும் பாலத்திற்கு அருகில் திடீரென நிலைமை மாறியது என்றும் அவர் கூறினார்.

பிரேக் திடீரென செயலிழந்து போனதாக அவர் குறிப்பிட்டார். 

விபத்து நிகழாமல் இருக்க தாம் தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்ததாகவும் காற்று அழுத்தம் இல்லாமல் பிரேக் செயலிழந்து போனதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே சமயம், கை பிரேக்-கும் செயல்படவில்லை என்று கியர்களை கூட மாற்ற முடியவில்லை என்றும் கூறினார். 

விபத்து நடப்பதற்கு முன்பு ஒரு லாரி உட்பட குறைந்தது நான்கு வாகனங்களைத் தாண்டிச் சென்றது தனக்கு நினைவிருப்பதாக குறிப்பிட்டார். 

நான் கடைசியாக வாகனத்தை முந்திச் செல்வது காரின் டேஷ்கேம் என்படும் கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

வளைந்த சாலைகளில் தான் பேருந்தை வேகமாக ஓட்டவில்லை என்றும் கண்ணீருடன் கூறினார். 

பேருந்து கவிழ்ந்த சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்ததாகவும், நினைவு திரும்பியப் பின் உடைந்த முன் கண்ணாடி வழியாக மாணவர்கள் தப்பிக்குமாறு கத்தியதாகவும் குறிப்பிட்டார். 

2016-ஆம் ஆண்டு முதல் பேருந்து ஓட்டுநராக செயல்படும் அமிருல் இதுவே தாம் சந்தித்த முதல் விபத்து என்றார். 

இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்காகக் அமிருல் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset