நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயம் பொருத்தப்படும்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயமாகப் பொருத்தப்படுவது தொர்பான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதையதையும் அந்தோனி லோக் உறுதிப்படுத்தினார். 

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது என்றும் அவர் குறிப்பிட்டார். 

குறிப்பாக பொறுப்பற்ற ஓட்டுநர்கள் மற்றும் சாலை விதிமுறைகளைப் பின்பற்றாத கனரக வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சாலை பயனர்களின் பாதுகாப்பைப் போக்குவரத்து அமைச்சகம் எப்போதும் உறுதி செய்யும் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset