நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உப்சி மாணவர்களின் பேருந்து விபத்து: மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பேருந்து ஓட்டுநர் கைது

ஈப்போ:

உப்சி மாணவர்களின் விபத்துக்கு காரணமாக இருந்து  பேருந்து  ஓட்டுநர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பேரா மாநில போலிஸ் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் இதனை தெரிவித்தார்.

உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் மரணமடைந்த பேருந்து விபத்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த  விபத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு கைது செய்யப்படுவார்.

அந்த நபர் தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் மீது  நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படும் வரை நாங்கள் காத்திருந்தோம்.

நேற்று ஓட்டுநரின் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் போலிசார் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset