நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திறன், செயற்கை நுண்ணறிவு, தொழிலாளர் மேம்பாட்டு ஆகியவற்றில் மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து செயல்படும்: மனிதவள அமைச்சு

துபாய்:

திறன், செயற்கை நுண்ணறிவு, தொழிலாளர் மேம்பாட்டு ஆகியவற்றில் மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து செயல்படும்.

மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனிதவள அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அப்துல் மன்னன் அல் அவார் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு துபாயில் நடைபெற்றது.

துபாயில் நடந்த இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பில் இந்த ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டன.

உலகளாவிய தொழில்நுட்ப நிலப்பரப்பு, தொழிலாளர் சந்தையில் ஏற்படும் விரைவான மாற்றங்களுக்கு ஏற்ப இலக்கவியல் பணியாளர் கொள்கைகள், தொழிலாளர் இடம் பெயர்வு,  கல்வி மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மேலும்  எதிர்கால நோக்குடைய உத்திகள், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்த சந்திப்பு ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

உலகளாவிய தரநிலைகளுடன் இணக்கமான, உள்ளடக்கிய, தயாரிக்கப்பட்ட எதிர்கால பணியாளர்களை உருவாக்க இந்த நெருங்கிய உறவைப் பயன்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு அமைச்சர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

மலேசியா தற்போது செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தின் சவால்களை எதிர்கொள்ள தனது பணியாளர்களை தீவிரமாக தயார்படுத்தி வருவதாக ஸ்டீவன் சிம் டாக்டர் அப்துல் ரஹ்மானிடம் விளக்கியதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் நிதி, தொழில்நுட்பம், பொது சேவைத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் நாட்டின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள ஐக்கிய அரபு  எமிரேட்ஸ் தயாராக இருப்பதாக டாக்டர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாத மனிதவள அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset