நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெமர்லோவில் புயல்: 75 வீடுகள் சேதமடைந்தன

தெமர்லோ:

தெமர்லோவில் பல பகுதிகளில் பெய்த கனமழையுன் கூடிய புயல் காரணமாக மொத்தம் 75 வீடுகள் சேதமடைந்தன.

தெமர்லோ மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் இதனை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தாமான் ஸ்ரீ கெரினாவ், கம்போங் பூலாவ் டெராப், தாமான் பாமா காசி, தாமான் பூலாய் பிஸ்டாரி, கம்போங் பத்து 4 1/2 ஜாலான் மரான் ஆகிய இடங்களில் வசிப்பவர்களின் வீடுகளை பாதித்துள்ளது.

இருப்பினும், காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

இதுவரை எந்த தற்காலிக வெளியேற்ற மையங்களும் திறக்கப்படவில்லை என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மலேசிய சிவில் பாதுகாப்புப் படை பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உணவுகள் வழங்குவதோடு, சம்பவ இடத்தைக் கண்காணித்து தகவல்களைச் சேகரிக்கச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset