நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி ஹர்ஷீத்தா சாய் காலமானார்: பிரதமரின் அரசியல் செயலாளர் இரங்கல்

கோலாலம்பூர்: 

அரிய வகை இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒன்பது வயது சிறுமியான ஹர்ஷீத்தா சாய் சிகிச்சை பலனின்றி காலமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் அன்வாரின் அரசியல் செயலாளர் அஹ்மத் ஃபர்ஹான் ஃபௌசி கூறினார், 

இந்த தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இவ்வேளையில் ஹர்ஷீத்தா சாயை இழந்து வாடும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தான் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அஹ்மத் ஃபர்ஹான் ஃபௌசி குறிப்பிட்டார். 

முன்னதாக, வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பாக ஹர்ஷீத்தா சாய் குடும்ப உறுப்பினர்களிடம் நிதியுதவி அளிக்கப்பட்டிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset