நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகர் அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவில் தியாகப் பெருநாள் கொண்டாட்டம்; விமரிசையாக நடைபெற்றது: டத்தோ ஜவஹர் அலி

கோலாலம்பூர்:

தலைநகர் ஸ்ரீரம்பாய் அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவில் தியாகப் பெருநாள் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

அதன் நிறுவனர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை கூறினார்.

ஒவ்வொரு தியாகப் பெருநாளை முன்னிட்டு அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவில் ஆடு, மாடுகள் குர்பான் கொடுக்கப்படும்.

கிட்டத்தட்ட 25ஆவது ஆண்டாக இக் குர்பான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இம்முறை 150 ஆடுகளும் 7 மாடுகளும் குர்பான் கொடுக்கப்பட்டது.

குர்பான் கொடுக்கப்பட்ட ஆடு, மாடுகளின் ஒரு பகுதியை கொண்டு உணவு தயாரித்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவாக வழங்கப்பட்டது.

அதே வேளையில் வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இறைச்சிகள் பங்கிட்டு வழங்கப்பட்டது.

அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவில் நோன்பு பெருநாளும் தியாகப் பெருநாளும் விமரிசையாக கொண்டாடப்படும் நிகழ்வுகளாகும்.

குறிப்பாக இப் பெருநாள் காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதுதான் அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவின் முதன்மை இலக்கு என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

தங்களது இந்த சேவைக்கு அர்ப்பணிப்புணர்வோடு இளைஞர்கள் தோள் கொடுத்து உதவுவது உள்ளபடியே தமக்கு பெருமகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தருவதாக உள்ளது. கடந்த பல நாட்களாக இதற்கு திட்டமிட்டு இன்று சிறப்பாக செய்து முடித்தோம். இதற்காக ஒத்துழைத்த அனைத்து நல்லுங்களுக்கும் எங்கள் மார்க்கப் பள்ளியின் உஸ்தாத்மார்களுக்கும் வட்டார மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset