
செய்திகள் மலேசியா
படகு கவிழ்ந்த சம்பவத்தில் மரணமடைந்த கணவன் - மனைவியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன
கிள்ளான்:
கிள்ளான் துறைமுகத்தில் உள்ள தஞ்சோங் ஹராப்பான் நீரில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போனதாகக் கூறப்படும் கணவன் - மனைவி உடல்கள் இன்று மீட்கப்பட்டன.
சிலாங்கூர் கடல்சார் அமலாக்க பிரிவு செயல்பாட்டு அதிகாரி முஹம்மத் சயாபிக் சசாலி இதனை உறுதிப்படுத்தினார்.
இரண்டு உள்ளூர்வாசிகளின் உடல்களும் இன்று காலை 7.42 மணிக்கு வடக்கு துறைமுகம், போர்ட் கிள்ளானிலில் இருந்து சுமார் 0.1 கடல் மைல் தொலைவில் மிதந்தது.
தீயணைப்பு, மீட்புத் துறையின் படகுகளை பயன்படுத்தி உடல்களை வெற்றிகரமாக மீட்டு சிலாங்கூர் கடல்சார் படகுத் துறைக்கு கொண்டு வரப்பட்டது என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடந்த சம்பவத்தில், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் இறந்தனர்.
அதே நேரத்தில் கான் ஹான் டாட் மற்றும் அவரது மனைவி கரீன் மேன் ஆகியோர் காணாமல் போனது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2025, 2:16 pm
ஐயா செ. சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்ட உருவாக்கத் திருப்பணி அறிமுக விழா
June 8, 2025, 1:30 pm
ஃபஹ்மி ரேசாவின் பயணத் தடை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
June 8, 2025, 12:33 pm
காஸாவின் அமைதிக்கு ஆசியான், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு தேவை: பிரதமர்
June 8, 2025, 11:57 am
லுமுட்டில் குர்பான் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆடவர் மரணம்
June 8, 2025, 11:46 am
தியோ பெங் ஹாக் வழக்கில் குற்றச்சாட்டுகளைத் தொடருமாறு சட்டத்துறை தலைவருக்கு ஜசெக வலியுறுத்து
June 8, 2025, 11:39 am