
செய்திகள் மலேசியா
நாட்டை விட்டு வெளியேற ஃபஹ்மி தடுக்கப்படவில்லை; ஆனால் போலிஸ் கண்காணிப்புப் பட்டியலில் உள்ளார்: ஐஜிபி
கோலாலம்பூர்:
கலை ஆர்வலரும் கிராஃபிக் கலைஞருமான ஃபஹ்மி ரேசா உண்மையில் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவில்லை.
மாறாக அவர் போலிஸ் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரசாருடின் ஹுசைன் இதனை தெளிவுபடுத்தினார்.
சிங்கப்பூருக்கு விமானத்தில் ஏற விரும்பியபோது தான் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்ததாக ஆர்வலர் நேற்று கூறியதைத் தொடர்ந்து இந்த விளக்கம் வந்துள்ளது.
ஃபஹ்மி அதிகாரப்பூர்வ பயணத் தடைக்கு உட்பட்டவர் அல்ல.
மாறாக அவர் இன்னும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் அவரது பெயர் போலிசார் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் ஒரு பயணத் தடைக்கானது அல்ல. இது போலிசாரின் உள் கண்காணிப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2025, 2:16 pm
ஐயா செ. சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்ட உருவாக்கத் திருப்பணி அறிமுக விழா
June 8, 2025, 1:30 pm
ஃபஹ்மி ரேசாவின் பயணத் தடை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
June 8, 2025, 12:33 pm
காஸாவின் அமைதிக்கு ஆசியான், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு தேவை: பிரதமர்
June 8, 2025, 12:01 pm
படகு கவிழ்ந்த சம்பவத்தில் மரணமடைந்த கணவன் - மனைவியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன
June 8, 2025, 11:57 am
லுமுட்டில் குர்பான் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆடவர் மரணம்
June 8, 2025, 11:46 am
தியோ பெங் ஹாக் வழக்கில் குற்றச்சாட்டுகளைத் தொடருமாறு சட்டத்துறை தலைவருக்கு ஜசெக வலியுறுத்து
June 8, 2025, 11:39 am