நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஸாவின் அமைதிக்கு ஆசியான், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு தேவை: பிரதமர்

புத்ராஜெயா:

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர ஆசியான் நாடுகளும் வளைகுடா கூட்டமைப்பு (ஜிசிசி) நாடுகளும் வலுவான ஒத்துழைப்பு தர வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பாலஸ்தீன மக்களின் நீண்டநாள் துயரத்தையும் துன்பத்தையும் நீக்க வட்டார அளவிலும் அனைத்துலக அளவிலும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.

காஸாவுக்கு மலேசியா தொடர்ந்து ஆதரவாக இருக்கும். ஆனால் மலேசியா போன்ற ஒரு நாட்டின் ஆதரவு மட்டும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவராது.

காஸா தொடர்பில் வளைகுடா நாடுகளும் மலேசியா போல் ஒரே எண்ணம் கொண்டுள்ளன.

இஸ்ரேலின் அட்டூழியத்தை ஒடுக்க வேண்டும் என்றால் ஆசியான் நாடுகள், வளைகுடா நாடுகள் மற்றும் சில நாடுகள் ஒற்றுமையாக முன்னின்று உலக நாடுகளுக்கு அழுத்தம் தந்து தெளிவான செய்தியை எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset