நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லுமுட்டில் குர்பான் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆடவர் மரணம் 

லுமுட்:

லுமுட்டில் தியாகப் பெருநாளை முன்னிட்டு குர்பான் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆடவர் ஒருவர் திடீரென்று மரணமடைந்தார்.

இந்த  லுமுட் அருகே உள்ள கம்போங் சித்தியாவான், கம்போங் சுங்கை ரம்புட்டில் நிகழ்ந்தது.

குர்பான் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த மயங்கி விழுந்ததாகவும் அவர் 50 வயதான ரிட்சுவான் எனவும்  அடையாளம் காணப்பட்ட அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்றும் தெரிவிதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நேற்று மதியம் 12.30 மணியளவில் நடந்ததாக மஞ்சுங் மாவட்ட போலிஸ்படைத் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனை அதிகாரிகளால் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

மேலும் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் முடிவுகள் பாதிக்கப்பட்டவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

போலிஸ் தரப்பு இந்த வழக்கை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset