நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோசமான வானிலை காரணமாக 50 நிமிட விமானப் பயணம் 4 மணி நேரமாக மாறியது

சிப்பாங்:

மோசமான வானிலை காரணமாக 50 நிமிட விமானப் பயணம் 4 மணி நேரமாக மாறியது.

ஜொகூர்பாருவில் இருந்து கோலாலம்பூருக்கு இடையேயான விமானப் பயணம் 50 நிமிடங்கள் மட்டுமே.

ஆனால்  நேற்று இரவு மோசமான வானிலை காரணமாக இந்த விமானப் பயணம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக மாறியது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தனது இந்த பதட்டமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ஜொகூரில் நிதி திரட்டும் இரவு விருந்தில் கலந்து கொண்ட பிறகு இரவு 10.45 மணிக்கு ஏர் ஆசியா விமானம் ஏகே6047 இல் ஏறிய லோக், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்ததால் கேஎல்ஐஏ வான்வெளியில் விமானம் திரும்ப வேண்டியிருந்தது.

விமானம் ஓடுபாதையை நெருங்கியதும், பலத்த காற்று, பலத்த புயல் வீசிக்கொண்டிருப்பதை விமானி உணர்ந்து தரையிறக்கத்தைத் தவிர்த்தார்.

விமானம் கேஎல்ஐஏ வான்வெளியில் திரும்பியது. இறுதியில் விமானம் எரிபொருள் நிரப்ப பினாங்கிற்கு திருப்பி விடப்பட்டது என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

இதே போன்று குறைந்தது ஐந்து ஏர் ஏசியா விமானங்களும் திருப்பி விடப்பட்டன.

அதே நேரத்தில் பல பயணிகள் எதிர்பாராத வானிலை காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது விமான நடவடிக்கைகளில் முக்கிய சவால்களில் ஒன்றாகும்.

இருப்பினும், சூழ்நிலையை கையாள்வதில் விமானத்தின் கேப்டன் டெங் ஹுவா ஜெர், முதல் அதிகாரி பிரையன் அலெக்சாண்டர் யின் கியான் யாம் ஆகியோரின் விரைவான நடவடிக்கை, உயர் தொழில்முறைத்தன்மையை அந்தோனி லோக் பாராட்டினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset