நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தியோ பெங் ஹாக் வழக்கில் குற்றச்சாட்டுகளைத் தொடருமாறு சட்டத்துறை தலைவருக்கு ஜசெக வலியுறுத்து

கோலாலம்பூர்:

தியோ பெங் ஹாக் வழக்கில் குற்றச்சாட்டுகளைத் தொடருமாறு சட்டத்துறை தலைவருக்கு ஜசெக வலியுறுத்தியுள்ளது.

தொழில்நுட்ப விஷயங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை நிறுத்திவிட்டு, தியோ பெங் ஹாக்கின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது உடனடியாக வழக்குத் தொடரப்பட வேண்டும்.

ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடிக்க சட்டத்துறை தலைவர் அலுவலகம் எடுத்த முடிவு வழக்கின் உண்மைகளுக்கும் முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் முரணானது.

ஜசெஜ தேசியத் தலைவர் கோபிந்த் சிங் தியோ,  பொதுச் செயலாளர் அந்தோனி லோக் ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில் இதனை தெரிவித்தனர்.

விசாரணையை நிறுத்துவதற்கான தனது முடிவை சட்டத்துறை தலைவர் அலுவலகம் மறுபரிசீலனை செய்ய வேன்டும்.

அதே வேளையில், வழக்கை மேலும் நடவடிக்கை இல்லை என வகைப்படுத்திய சட்டத்துறை தலைவர் அலுவலகம்  நடவடிக்கைக்கு எதிராக குடும்பத்தினர் எடுத்த சட்ட நடவடிக்கையையும் அவர்கள் ஆதரித்தனர்.

தியோ குடும்பத்தினரின் நீதித்துறை மறுஆய்வு மூலம் இந்த முடிவை நீதிமன்றத்தில் சவால் செய்ய நடவடிக்கை எடுப்பது பரிசீலிக்கப்பட்டு வருவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறினர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset