
செய்திகள் மலேசியா
மோசடி கும்பல் எனது குரலையும், படத்தையும் போலியாகப் பயன்படுத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர்: குவான் எங்
ஜார்ஜ் டவுன்:
முதலீட்டு மோசடி கும்பல் எனது குரலையும் படத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்கள் பரப்புகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட போலி வீடியோக்கள் ஒரு முதலீட்டுத் திட்டத்தை தாம் ஆதரிப்பதாகக் கூறுகிறது.
ஆனால் அந்த வீடியோக்கள் போலியானவை. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை.
இதனை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் யாரையும் எதிலும் முதலீடு செய்யச் சொன்னதில்லை.
நான் வணிகத்தில் ஈடுபடவில்லை. நான் அரசியலில் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
முன்னதாக இந்த மோசடி செய்யப்பட்ட வீடியோ ஒரு தசாப்தத்திற்கும் மேலாக லிம் உடனான ஒரு நேர்காணலை அடிப்படையாகக் கொண்டது என்று நம்பப்படுகிறது.
அசல் பதிவு ஆங்கிலத்தில் இருந்தது. ஆனால் போலி பதிப்பு மாண்டரின் மொழியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2025, 2:16 pm
ஐயா செ. சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்ட உருவாக்கத் திருப்பணி அறிமுக விழா
June 8, 2025, 1:30 pm
ஃபஹ்மி ரேசாவின் பயணத் தடை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
June 8, 2025, 12:33 pm
காஸாவின் அமைதிக்கு ஆசியான், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு தேவை: பிரதமர்
June 8, 2025, 12:01 pm
படகு கவிழ்ந்த சம்பவத்தில் மரணமடைந்த கணவன் - மனைவியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன
June 8, 2025, 11:57 am
லுமுட்டில் குர்பான் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆடவர் மரணம்
June 8, 2025, 11:46 am
தியோ பெங் ஹாக் வழக்கில் குற்றச்சாட்டுகளைத் தொடருமாறு சட்டத்துறை தலைவருக்கு ஜசெக வலியுறுத்து
June 8, 2025, 11:39 am