
செய்திகள் மலேசியா
ஃபஹ்மி ரேசாவின் பயணத் தடை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர்:
கலை ஆர்வலர் ஃபஹ்மி ரேசா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போலிஸ்படை உரிய விளக்கம் அளிக்கவும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் மடானி அரசாங்கத்தின் கீழ் தனிநபர் சுதந்திரங்கள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
ஃபஹ்மி ரேசாவின் சகோதரர் மீது விதிக்கப்பட்ட பயணத் தடை குறித்த விவகாரத்தை போலிசார் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தேசிய பாதுகாப்பை பாதிக்காத வரை அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறாத வரை மடானி அரசாங்கம் தனிநபர் சுதந்திரங்களை நிலை நிறுத்துகிறது.
எனவே, இந்த விஷயத்தில் போலிஸ்படை உரிய விளக்கத்தை வழங்க வேண்டும். மேலும் பிரதமர் அலுவலகம் இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.
பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக நேற்று சிங்கப்பூருக்கு விமானத்தில் ஏற விரும்பியபோது வெளிநாடு செல்வதிலிருந்து தான் தடுக்கப்பட்டதாக ஃபஹ்மி கூறியதை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2025, 2:16 pm
ஐயா செ. சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்ட உருவாக்கத் திருப்பணி அறிமுக விழா
June 8, 2025, 12:33 pm
காஸாவின் அமைதிக்கு ஆசியான், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு தேவை: பிரதமர்
June 8, 2025, 12:01 pm
படகு கவிழ்ந்த சம்பவத்தில் மரணமடைந்த கணவன் - மனைவியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன
June 8, 2025, 11:57 am
லுமுட்டில் குர்பான் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆடவர் மரணம்
June 8, 2025, 11:46 am
தியோ பெங் ஹாக் வழக்கில் குற்றச்சாட்டுகளைத் தொடருமாறு சட்டத்துறை தலைவருக்கு ஜசெக வலியுறுத்து
June 8, 2025, 11:39 am