நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர்களின் நெரிசலை தவிர்க்க 121 பள்ளிகளில் கல்வியமைச்சு கூடுதல் வகுப்பறைகளை கட்டுகிறது

புத்ராஜெயா:

மாணவர்களின் நெரிசலை தவிர்க்க 121 பள்ளிகளில் கல்வியமைச்சு கூடுதல் வகுப்பறைகளை கட்டுகிறது.

கல்வியமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு மாநிலங்களில் நெரிசலான 121 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளைக் கட்டி வருகிறது.  இதனால் அதிகமாக மாணவர்களால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க முடியும்.

முழு மேம்படுத்தல் அடிப்படையிலான இத்திட்டம்   88 மில்லியன் ரிங்கிட் செலவை உள்ளடக்கியது.

மேலும் பொதுப் பணித் துறை மூலம் பணிகள் அமைச்சால் செயல்படுத்தப்படும்.

தொழில்துறை கட்டிட அமைப்பு, முன் அங்கீகரிக்கப்பட்ட திட்ட  முறைகளைப் பயன்படுத்தி குறுகிய கட்டுமான காலம்,  நடப்பு ஆண்டுக்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்வதை இந்த நடவடிக்கை உள்ளடக்கியது.

மொத்தமாக சிலாங்கூரில் 103 பள்ளிகளின் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பேரா (8), பகாங் (4), நெகிரி செம்பிலான் (3), திரெங்கானு, கோலாலம்பூர்,  பினாங்கில் தலா ஒரு பள்ளிகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், கற்பித்தல் உபகரணங்கள்ம்  முக்கிய பயன்பாட்டிற்கான தளபாடங்கள் வழங்குவதுடன் சிறப்பு கல்வி ஒருங்கிணைப்புத் திட்டமும் அ டங்கும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களுக்கு கல்விக்கான உகந்த அணுகலை வழங்குவதற்கு இது ஒரு பயனுள்ள குறுகிய கால தீர்வு இதுவாகும் என கல்வியமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset