
செய்திகள் மலேசியா
பெர்லிஸ் மாநிலத்தில் 4 இலக்க எண் லோட்டரி சட்டவிரோதமானது என்பதை நிரூபிக்க டோட்டோ தவறிவிட்டது: நீதிமன்றம்
கங்கார்:
பெர்லிஸ் மாநிலத்தில் 4 இலக்க எண் லோட்டரி சட்டவிரோதமானது என்பதை நிரூபிக்க டோட்டோ நிறுவனம் தவறிவிட்டது.
பெர்லிஸில் தங்கள் சூதாட்ட வணிகத்தை மீண்டும் தொடங்க ஸ்போர்ட்ஸ் டோட்டோ மலேசியா உட்பட நான்கு பேர் தாக்கல் செய்த விண்ணப்பத்தை கங்கார் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதித்துறை ரீதியாக மதிப்பாய்வு செய்யக்கூடிய எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையும் விண்ணப்பதாரர்கள் அடையாளம் காணத் தவறிவிட்டனர்.
மேலும் தேசியக் கூட்டணி தலைமையிலான மாநில அரசு எடுத்த எந்த முடிவையும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் விண்ணப்பதாரர்கள் காட்டவில்லை என்று நீதிபதி அரிக் சனுசி கூறினார்.
லோட்டரி நடத்துபவர்களுக்கு வணிக வளாக உரிமங்களை வழங்க மாநில அரசு மறுத்ததாகக் கூறப்படுவது குறித்த அச்சு, இணைய செய்தி அறிக்கைகளை மட்டுமே அவர்கள் நம்பியிருப்பதாக நீதிபதி கூறினார்.
இந்த செய்தி அறிக்கைகளை மாநில அரசின் அதிகாரப்பூர்வ முடிவுகளாக கருத முடியாது.
எனவே இந்த விண்ணப்பம் அற்பமானது என்று கருதப்படுகிறது என்று அரிக் வெளியிடப்பட்ட தீர்ப்பில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am