நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் துருக்கியுடன் மலேசியா துணை நிற்கும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

பாலஸ்தீன மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் துருக்கியுடன் மலேசியா துணை நிற்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார். 

துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாட்டின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார். 

அதேவேளையில், துருக்கியின் இந்த நிலைப்பாட்டிற்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருக்க முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

இதற்கிடையில், எர்டோகனின் சமீபத்திய அதிகாரப்பூர்வ மலேசியா பயணத்தை நாட்டின் அரசத் தந்திர வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அர்த்தமுள்ள வருகைகளில் ஒன்றாக திகழ்கிறது என்றார் அன்வார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset