நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புருணை ஆட்சியாளர் சுல்தான் ஹசானால் போல்கியா நலமுடன் தாயகம் திரும்பினார் 

கோலாலம்பூர்: 

உடல்நலக்குறைவால் கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வந்த புருணை ஆட்சியாளர் சுல்தான் ஹசானால் போல்கியா நலமுடன் தாயகம் திரும்பினார்

இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. சுல்தான் ஹசானால் போல்கியாவும் அவரின் மனைவி பெங்கிரான் அனாக் ஹஜா சலேஹாவும் பிரதமர் அன்வாரையும் அவரின் துணைவியார் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயிலையும் சந்திந்த பிறகு இல்லம் திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டது. 

ஆசியான் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த சுல்தான் ஹசானால் போல்கியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதன் காரணமாக தேசிய இருதய கழகத்தில் சுல்தான் ஹசானால் போல்கியா அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் ஐஜிஎன் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு சுல்தான் ஹசானால் சிறிது காலம் இங்கு ஓய்வில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset