நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான வணிகங்களுக்கான மின்-விலைப்பட்டியல்: 2026 ஜனவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

கோலாலம்பூர்:

ஐந்து மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான வருடாந்திர வருமானம் கொண்ட வணிகங்களுக்கான மின்-விலைப்பட்டியல் 2026 ஜனவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உள்நாட்டு வருவாய் வாரியம் இதனை ஓர் அறிக்கையின் வாயிலாக அறிவித்தது.

ஆண்டு வருமானம் 1 மில்லியன் ரிங்கிட் முதல் 5 மில்லியன் ரிங்கிட்  வரை விற்பனை கொண்ட வரி செலுத்துவோருக்கு மின்-விலைப்பட்டியல் ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வரவிருந்தது.

ஆனால் தற்போது 2026ஆம் ஆண்டு   ஜனவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

இருப்பினும், வருடாந்திர வருமானம் 5 மில்லியன் ரிங்கிட் முதல் 25 மில்லியன் ரிங்கிட் தாண்டிய விற்பனை கொண்ட வரி செலுத்துவோருக்கு மின்-விலைப்பட்டியலை கட்டாயமாக செயல்படுத்துவதற்கான தேதி இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதியாகும்.

மின் விலைப்பட்டியல்கள் தொடர்பான சட்டத் தேவைகளுக்கு இணங்குவதில் வரி செலுத்துவோரின், குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் உள்ள வணிகங்களின் உறுதிப்பாட்டை அரசாங்கம் அங்கீகரிக்கிறது.

இந்த முறையை செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் செயல்பாட்டு சவால்கள் மற்றும் போதுமான தயாரிப்பு நேரத்தின் தேவையை அரசாங்கம் அறிந்திருக்கிறது.

 நிதி அமைச்சு வருடாந்திர வருமானம் அல்லது 500,000 ரிங்கிட்டுக்கும் குறைவான விற்பனை உள்ள வரி செலுத்துவோருக்கு தற்போதைக்கு மின்-விலைப்பட்டியல் தேவையிலிருந்து விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset