
செய்திகள் மலேசியா
மோட்டார் சைக்கிள் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் மூலம் ஜேபிஜே 1.13 மில்லியன் சம்மன்களை வெளியிட்டுள்ளது
கோத்தாபாரு:
மோட்டார் சைக்கிள் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் மூலம் ஜேபிஜே 1.13 மில்லியன் சம்மன்களை வெளியிட்டுள்ளது.
ஜேபிஜே அமலாக்க பிரிவின் மூத்த இயக்குனர் முஹம்மது கிஃப்லி மா ஹசான் இதனை கூறினார்.
கடந்த ஆண்டு முதல் இதுவரை நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக ஜேபிஜே 1.13 மில்லியன் சம்மன்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு 848,885, இந்த ஆண்டு முழுவதும் 283,255 வழங்கப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சிறப்பு நடவடிக்கைகள் மூலம், உரிமம் இல்லாதது, காலாவதியான மோட்டார் வாகன உரிமம், காப்பீட்டுத் தொகை இல்லாதது என மூன்று முக்கிய குற்றங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.
ஓட்டுநர் உரிமம் இல்லாத குற்றத்திற்காக, 301,774 சம்மன்க்ள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காலாவதியான மோட்டார் வாகன உரிமத்திற்கு மொத்தம் 251,886 சம்மன்களும் வாகன காப்பீடு இல்லாததற்கு மொத்தம் 233,819 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் செய்யும் பல தவறுகள் இன்னும் உள்ளன. மேலும் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறோம்.
ஏனென்றால், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் மிகப் பெரியவை. இது விபத்து விகிதத்தில் 65 சதவீதத்திற்கு பங்களிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am