நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் தேர்தல் குறித்து 190 புகார்கள்; ஆர்ஓஎஸ் தலையிட வேண்டும்: முகமத் இம்ரான்

கோலாலம்பூர்:

கெஅடிலான் தேர்தல் குறித்து 190 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில் இவ்விவகாரத்தில் ஆர்ஓஎஸ் தலையிட வேண்டும்.

முன்னாள் லுமுட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது இம்ரான் அப்துல் ஹமீத் இதனை வலியுறுத்தினார்.

ஆர்ஓஎஸ் அனைத்து மட்டங்களிலும் கெஅடிலான் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். 

புகார்களின் அடிப்படையில் அனைத்து மட்டங்களிலும்  கெஅடிலான் தேர்தல்களை மீண்டும் நடத்த கட்சிக்கு ஆர்ஓஎஸ்  உத்தரவிட வேண்டும்.

ஒரு உறுப்பினர், ஒரு வாக்கு என்ற பழைய முறையைப் பயன்படுத்தி அனைத்து மட்டங்களிலும் தேர்தல்களை மீண்டும் நடத்த வேண்டும்.

முடிவுகள் நிகழ்நேரத்தில் அறிவிக்கப்பட வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்களின் படங்களுடன் கூடிய பெரிய திரைகளில் காட்டப்பட வேண்டும்.

மே 23 அன்று மத்திய தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுமாறு நான் ஆர்ஓஎஸ்சிடம் கேட்டு கொள்கிறேன்  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset