
செய்திகள் மலேசியா
மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கும் ஒரு புதிய கூட்டணி தேவை: ராமசாமி
கோலாலம்பூர்:
மலாய்க்காரர் அல்லாத சமூகத்தினர் தங்கள் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்க ஒரு புதிய கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
பினாங்கின் முன்னாள் துணை முதல்வரும் உரிமை கட்சித் தலைவரும் பி. ராமசாமி இதனை வலியுறுத்தினார்.
மலாய்க்காரர்களை ஒரு பெரிய கூட்டணியின் கீழ் ஒன்றிணைக்க மலாய்க்காரர்கள் செயலகக் குழுவை அறிவிக்க வேண்டும் என்ற துன் டாக்டர் மகாதீர் முன்மொழிந்துள்ளார்.
மலாய்க்காரர்கள் அரசியல், பொருளாதாரத்தின் மீது மீண்டும் கட்டுப்பாட்டை அடையவும், அரசாங்கம் தீர்க்கத் தவறிய மலாய்க்காரர் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்த குழு இலக்கு வகிப்பதாக துன் மகாதீர் கூறினார்.
மகாதீரின் முன்மொழிவு மலாய்க்காரர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இருக்கக்கூடாது.
மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து மகாதீர் கவலைப்படுகிறார்.
ஆனால் சீனர்கள், இந்தியர்கள், கடசான், ஈபான் பிறர் உட்பட நாம் அனைவரும் கவலைப்பட வேண்டும். தற்போதுள்ள அமைப்பு அனைத்து மக்களுக்கும் நீதியை உறுதி செய்யத் தவறிவிட்டது.
ஆக மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கும் ஒரு புதிய கூட்டணி தேவை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am