நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் தென் கொரியா, ஜோர்டான், உஸ்பெகிஸ்தான்

சியோல்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு தென் கொரியா, ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

பஸ்ரா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியா அணியினர் ஈராக் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் கொரியா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஜோர்டான் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ஓமான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

உஸ்பெகிஸ்தான் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் ஐக்கிய அரபு சிற்றரசுடன் சமநிலை கண்டனர்.

இந்த ஆட்டங்களின் முடிவில் தென் கொரியா, ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset