
செய்திகள் மலேசியா
சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர்:
சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
டிஎஸ்கே எனப்படும் மலேசிய டைனமிக் சினார் காசிசே நலச் சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவக்குமார் இதனை கூறினார்.
மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு என்பது ஒரு மாணவரின் கல்வித் திறனை அங்கீகரிப்பதற்கான ஒரு வடிவமாக இருக்க வேண்டும்.
சிறந்த மதிப்பெண்களை பெற்றிருக்கும் மாணவர்களுக்காக பலமுறை வேண்டுகோள் விடுக்க வேண்டியதாக இருக்கக் கூடாது.
குறிப்பாக தங்கள் விண்ணப்பத்தின் நிலை அல்லது திட்டத்திற்கு மேல்முறையீடு செய்வது குறித்து இன்னும் தெளிவான பதிலைப் பெறாத பல சிறந்த இந்திய மாணவர்களின் தலைவிதி கேள்விக்குறியாகவே உள்ளது.
மெட்ரிகுலேஷன் வாய்ப்பு என்பது ஒரு மாணவரின் சிறந்த மதிப்பெண்களை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும்.
அந்த ஒரு பரிசுக்காக மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படக்கூடாது.
இந்த விவகாரத்தில் வெளிப்படையான கருத்துக்களை வழங்க அதிகாரிகள் தவறியது பெற்றோர்களையும் மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த முறையின் வெளிப்படைத்தன்மையின் அளவை பொதுமக்கள் தாங்களாகவே மதிப்பிடும் வகையில்,
இனம், வகை வாரியாக மாணவர் சேர்க்கை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை வழங்க மெட்ரிகுலேஷன் பிரிவு முன்வர வேண்டும்.
இதுவே எனது வேண்டுகோள் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பொதுமக்களின் குரலாக இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள்,
குறிப்பாக கல்விக்கான அணுகல் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் மௌனம் காப்பது குறித்தும் டத்தோ சிவக்குமார் கேள்வி எழுப்பினார்.
இந்தப் பிரச்சினையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் குரல் எங்கே? சிறந்த மாணவர்கள் விளக்கம் இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தும் போது அவர்கள் ஏன் குரல் கொடுப்பதில்லை? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm