நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5.11 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்; 9 பேர் கைது:  ஹுசைன் ஒமார் கான்

ஷாஆலம்:

கோலாலம்பூர், சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5.11 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில போலிஸ் படைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர்,  சிலாங்கூரில் ஐந்து தனித்தனி சோதனைகளில் அல்ஸ்டோனியா கும்பல் என்று அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலிசார் கைது செய்தனர்.

இதில் ஒரு வெளிநாட்டு பெண் உட்பட ஒன்பது சந்தேக நபர்களும் அடங்குவர்.

அதே வேளையில் அக்கும்பலிடம் இருந்து 5.11 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் கும்பல் தலைவர், இ-ஹெய்லிங் டிரைவராக பணிபுரியும் உள்ளூர் நபர்,  அவரது வெளிநாட்டு காதலர் ஆகியோர் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் கடந்த எட்டு மாதங்களாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது.

கைதானவர்களில்  ஆறு பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் அவர்களில் மூன்று பேர் குற்றம், போதைப்பொருள் தொடர்பான பதிவுகளையும் கொண்டுள்ளனர்என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset