
செய்திகள் மலேசியா
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மலேசிய வருகையைத் தடுக்க முயற்சி;அபத்தமான குற்றச்சாட்டு: பாகிஸ்தான் தூதர்
கோலாலம்பூர்:
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மலேசிய வருகையைத் தடுக்க முயற்சித்து என்பது அபத்தமான குற்றச்சாட்டாகும்.
பாகிஸ்தான் தூதர் சையத் அஹ்சன் ராசா ஷா இதனை கூறினார்.
மலேசியாவிற்கு இந்திய நாடாளுமன்றக் குழுவின் வருகையைத் தடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம்.
இந்திய செய்தி நிறுவனமான என்டிடிவி முதலில் செய்தி வெளியிட்ட இந்தக் குற்றச்சாட்டுகளை அதன் ஆணையர் சையத் அஹ்சன் ராசா ஷா அபத்தமானது, சித்தரிக்கப்பட்டது என அவர் நிராகரித்தார்.
நவீன ராஜதந்திர சூழலில், வேறொரு நாட்டிலிருந்து ஒரு பிரதிநிதியை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று தூதரகம் ஒரு நாட்டைக் கேட்பது அபத்தமானது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாடு திரும்பிய பின்னரே இந்த அறிக்கை வெளியானதாக சையத் அஹ்சன் கூறினார்.
பாகிஸ்தான் தூதரகம் மலேசிய அரசாங்கத்திடம் அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று கோரியதாக செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால் மலேசியா அந்த குற்றச்சாட்டை நிராகரித்தது.
அதன் அடிப்படையில் இந்தக் கூற்று முற்றிலும் அபத்தமானது என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm