நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே 

கோலாலம்பூர்: 

2025–2028-ஆண்டுக்கான பிகேஆரின் மத்திய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும் நடைபெறும் என்று அக்கட்சியின்  பொதுச் செயலாளர் டாக்டர் ஃபுசியா சாலே கூறினார்.

ஹஜ் புனித யாத்திரை முடிந்த பின் இந்த மாதம் கூட்டம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார். 

மே 29-ஆம் தேதி நடைபெற்ற முதல் அரசியல் குழு கூட்டத்தைத் தொடர்ந்து, புதிய தலைமைத்துவக் கூட்டத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். 

மத்திய தலைமைத்துவ மன்ற கூட்டம் துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட கட்சியின் புதிய தலைமைத்துவ உறுப்பினர்களை நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணைத் தலைவர் நூருல் இசா அன்வர் உட்பட சில தலைவர்கள் தற்போது சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர்.

அதனைக் கருத்தில் கொண்டு, கூட்டத்திற்கான் தேதி விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset