
செய்திகள் மலேசியா
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
கோலாலம்பூர்:
2025–2028-ஆண்டுக்கான பிகேஆரின் மத்திய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஃபுசியா சாலே கூறினார்.
ஹஜ் புனித யாத்திரை முடிந்த பின் இந்த மாதம் கூட்டம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
மே 29-ஆம் தேதி நடைபெற்ற முதல் அரசியல் குழு கூட்டத்தைத் தொடர்ந்து, புதிய தலைமைத்துவக் கூட்டத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மத்திய தலைமைத்துவ மன்ற கூட்டம் துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட கட்சியின் புதிய தலைமைத்துவ உறுப்பினர்களை நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணைத் தலைவர் நூருல் இசா அன்வர் உட்பட சில தலைவர்கள் தற்போது சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
அதனைக் கருத்தில் கொண்டு, கூட்டத்திற்கான் தேதி விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm