
செய்திகள் மலேசியா
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
கோலாலம்பூர்:
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி என்பது பிரிவினைக்கு அல்ல. நிலைத்தன்மைக்கான முயற்சி.
மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் இதனை கூறினார்.
இந்த மெகா கூட்டணி பல்வேறு தரப்பிலிருந்து எதிர்வினைகளைத் தூண்டியிருந்தாலும், பொதுமக்கள் அதன் ஸ்தாபனம் குறித்து கவலைப்படத் தேவையில்லை.
நாங்கள் ஒரு நேர்மையான கேள்வியைக் கேட்கிறோம். அதாவது ஒற்றுமைக்கு ஏன் அனைவரும் பயப்பட வேண்டும்?
ஒற்றுமை என்பது ஒரு அச்சுறுத்தல் அல்ல. ஆனால் அரசியல் நிலைத்தன்மைக்கான அடிப்படை முயற்சியாகும்.
மலேசியா செழிக்க, ஆட்சியில் நிலைத்தனமை இருக்க ஒரு முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
துன் மகாதீர் முகமது போன்ற ஒரு மூத்த அரசியல்வாதி தனது சமூகத்தில் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும்போது, அவர் தனது பொறுப்பை நிறைவேற்றுகிறார்.
மலாய்க்காரர்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் இந்த அழைப்பு முக்கியமானதாக உள்ளது.
மலாய் அரசியல் ஒற்றுமை நிலையான தேசியத் தலைமைக்கு வழிவகுக்கும்.
மேலும் துன் மகாதீரின் முயற்சி பன்முகத்தன்மையை நிராகரிப்பதல்ல, மாறாக அது யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm