நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2023-ஆம் ஆண்டு முதல் தெலுக் இந்தான் பள்ளி மாணவர்களுக்கு1 மில்லியனுக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளேன்: ங்கா கோர் மிங்

தெலுக் இந்தான்: 

2023-ஆம் ஆண்டு முதல் தெலுக் இந்தானில் அமைந்துள்ள ஆரம்ப, இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளதாக வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார். 

தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமல்லமல் வசதி குறைந்த மாணவர்களுக்கும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ங்கா இவ்வாறு கூறினார். 

மடானி அரசாங்கம் எப்போதும் அனைத்து இன மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த நிதி ஒதுக்கீடு தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்திலிருந்து ஒதுக்கப்பட்டவை என்று ஹிலிர் பேராக் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கடந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 11A, 10A மற்றும் 9A மதிப்பெண்கள் பெற்ற சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் RM82,000 நிதி வழங்கப்பட்டுள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset