நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து - கம்போடிய எல்லைப் பிரச்சினை தொடர்பாக தாய்லாந்து பிரதமரை தொடர்பு கொள்வேன்: அன்வார்

புத்ராஜெயா:

தாய்லாந்து - கம்போடிய எல்லைப் பிரச்சினை தொடர்பாக இன்று தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவைத் தொடர்பு கொள்வேன்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இரு நாடுகளிலும் உள்ள நிலைமையை மலேசியா அறிந்திருப்பதாக ஆசியான் தலைவரான அவர் கூறினார்.

பேடோங்டார்ன் ஷினவத்ராவுடனான கலந்துரையாடல்களின் முடிவுகள் குறித்து  பின்னர் ஒரு அறிக்கையை வெளியிடப்படும்.

இன்று புத்ராஜெயாவிற்கு அருகிலுள்ள டேசா பிங்கிரான் புத்ராவின் அல்-இக்வான் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மே 28ஆம் தேதிய்ன்று, தாய்லாந்தின் உபோன் ரட்சதானி மாநிலத்திலும், கம்போடியாவின் பிரியா விஹார் மாநிலத்திலும் தாய்லாந்து,  கம்போடிய இராணுவப் படைகள் ஒரு குறுகிய மோதலில் ஈடுபட்டன.

இதில் ஒரு கம்போடிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் கம்போடியா எல்லைப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset