நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர்:

தியாகப் பெருநாள் கொண்டாடப்படும் நிலையில், நாளை ஜுன் 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 8-ஆம் தேதி வரை பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா தெரிவித்துள்ளது. 

சிலாங்கூர், ஜொகூர், பேராக், பினாங்கு, கெடா, பெர்லிஸ், சபா மாநிலங்களில் நாளை காலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, புத்ராஜெயா, கோலாலம்பூர் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் பிற்பகலில் வெயிலாக இருக்கும் என முகநூலில் மெட்மலேசியா அறிவித்துள்ளது.

மேலும், ஜூன் 8 ஆம் தேதி, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், பகாங், திரங்கானு, கிளந்தான், லாபுவான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் வானிலை வெப்பமாக இருக்கும் என்று வானிலை முன் அறிவித்துள்ளது.

அதே நாளில் பிற்பகலில், பேராக், ஜொகூர், பகாங், திரங்கானு, கிளந்தான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset