
செய்திகள் மலேசியா
டத்தாரான் மெர்டேக்காவில் கைகலப்பு சம்பவம்: மேலும் இருவர் கைது
கோலாலம்பூர்:
டத்தாரான் மெர்டேக்காவில் கைகலப்பு சம்பவம் தொடர்பாக மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் மொத்தமாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21, 22 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்களைப் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் பிடித்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி முஹம்மத் இசா கூறினார்.
முதல் சந்தேக நபர் அதிகாலை 1.40 மணிக்குக் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது சந்தேக நபர் அதிகாலை 3.15 மணிக்கு கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தின் போது இரு ஆடவர்களும் அப்பகுதியில் இருந்ததாகவும் அதில் ஒருவர் பாதிக்கப்பட்டவரைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
முன்னதாக டத்தாரான் மெர்டேக்காவில் கைகலப்பு சம்பவம் தொடர்பில் ஈடுபட்ட குழுவை போலீஸ் அடையாளம் கண்டறிந்ததாக போலீஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm