
செய்திகள் மலேசியா
பெட்ரோனாஸின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் ஒப்பந்த ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்: பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா:
பெட்ரோனாஸ் நிறுவனத்தின் சுமார் 5,000 ஆட்குறைப்பு நடவடிக்கையை ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களைப் பாதிக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்நிறுவனத்தின் இந்நடவடிக்கை தமக்கு வேதனையளிப்பதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
தேசிய எண்ணெய் மற்றும் கனிவள நிறுவனமான பெட்ரோனாஸின் அறிவிப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அன்வார் இவ்வாறூ கூறினார்.
பலர் ஒப்பந்த அடிப்படையில் அங்கு வேலை செய்கின்றனர் என்று ஜாலான் பிங்கிரான் புத்ரா சுராவ் அல்-இக்வானில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து வருவதால் செலவுகளைக் குறைப்பதற்காக பெட்ரோனாஸ் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக நேற்று புளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.
தேசிய எண்ணெய் மற்றும் கனிவள நிறுவனம் 5,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ தெங்கு முஹம்மது தௌஃபிக் அஜிஸ் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm