நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உதவி நிதியம் நடத்தும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கட்டுரைப் போட்டியில் 60 மாணவர்கள் தேர்வு: நேரடிப் போட்டிக்கு அழைக்கப்படுகின்றனர்

கோலாலம்பூர்: 

தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியம் நடத்திய தமிழ்ப்பள்ளி மாணவர்கான கட்டுரைப் போட்டியில் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

வடக்கு, மத்திய, தெற்கு மண்டலங்களாகப் பிரித்து நடத்தப்பட்டு தலா 20 மாணவர்கள் வீதம் 60 மாணவர்கள் சிறந்த கட்டுரையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  

இவர்கள் மூன்று இடங்களில் நடைபெறும் நேரடி போட்டியில் கலந்து கொள்ள வருமாறு அழைக்கப்படுகின்றனர்.  

தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியம் நடத்தும் கட்டுரைப் போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.  

இப்போட்டியில் கலந்துக்கொள்ள ஊக்கப்படுத்திய தலைமை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, தலா 20 கட்டுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

மத்திய மண்டலத்தில் சிறந்த கட்டுரையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  20 மாணவர்களும் அவர்களின் பள்ளிகளும் வருமாறு:

1.          மே. சிவப்பிரியா         பத்து ஆராங் தமிழப் பள்ளி 
2.         வர்ஷிக்கா ஆனந்தன்         வெஸ்ட் கன்ட்ரி காஜாங்
3.         ரூ. ரிஷோனா ஏஞ்சல்     காஜாங் தமிழ்ப்பள்ளி 
4.         ம. அகிலேஷ்             தெலுக் மெர்பாவ், சுங்கை பெலேக்
5.         டேஷ்வரன் வாசுதேவன்     காஜாங் தமிழ்ப்பள்ளி
6.         விலோஷனா தங்கமணி     தெலுக் மெர்பாவ், சுங்கை பெலேக்
7.         வ. ரிச்சினா              ஜென்ஜாரோம்
8.         மு. சுவாபஸ்ரீ             தாமான் பெர்மத்தா, டெங்கில் 
9.         மோ. டர்வின்         ஜென்ஜாரோம்
10.         மு. லக்க்ஷனா             ஜென்ஜாரோம்
11.         சி. ஆனந்தராஜ்         ஜென்ஜாரோம்
12.         வாக்க்ஷனா              செர்டாங்
13.          பூரணி ஆறுமுகம்         தாமான் பெர்மத்தா, டெங்கில்
14.         சி. மகேந்திரா             தாமான் பெர்மத்தா, டெங்கில்
15.         வி. சரண்ராஜ்             தாமான் பெர்மத்தா, டெங்கில்
16.         பு. பெவிஷனா         தெலுக் மெர்பாவ், சுங்கை பெலேக்
17.         ம. லோகன்             தெலுக் மெர்பாவ், சுங்கை பெலேக்
18.         கு. யுகானந்தன்         செர்டாங்
19.         தீபான்யா ராஜன்         தெலுக் மெர்பாவ், சுங்கை பெலேக்
20.         விவேஷஸ்ரீ             செர்டாங்

இந்நிலையில், வட மண்டலத்தில் சிறந்த கட்டுரையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 20 மாணவர்களும் அவர்களின் பள்ளிகளும் வருமாறு:
1.        அஞ்ஜனா தீபன்ராஜ்         பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி 
2.         ஷைந்திவி கோவலன்         ஈப்போ புனித பிலோமீனா
3.         இரா. பைரல்             ஈப்போ கான் வெண்ட் 
4.         பிரேமித்தா புருஷோதமன்     ஈப்போ புனித பிலோமீனா
5.         நித்திஷ் பாஸ்கரன்         பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி     
6.         ஷர்விநாயகி வினாயகசேகரன் ஈப்போ புனித பிலோமீனா
7.         க. மனிஷ்ஷா             பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
8.         நவியா தர்மேந்திர         பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
9.         ந. ஐஸ்வர்யா             பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
10.         சர்வினி பரமேஸ்வரன்     பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
11.          வேதாஷினி இராதகிருஷ்ணன் ஈப்போ புனித பிலோமீனா 
12.         தீபிகாசாய் சங்கர்         ஈப்போ புனித பிலோமீனா
13.         அ. துர்காஷினி         தஞ்சோங் ரம்புத்தான்
14.         லாவண்யா விஜயன்         பிடோர் பள்ளி 
15.         அஸ்மித்த             பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
16.         கி. கெமெலியா என்         ஈப்போ புனித பிலோமீனா
17.         இரகஷனராஜ             பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
18.         சாதனா லோகநாதன்         ஈப்போ கம்போங் சிமி 
19.         சுந்தரவேல் கணேசன்         புண்டுட் மஞ்சோங் 
20.          ஷமிதா சாமுவேல்          ஈப்போ புனித பிலோமீனா

தெற்கு மண்டலத்தில் சிறந்த கட்டுரையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 20 மாணவர்களும் அவர்களின் பள்ளிகளும் வருமாறு:
1.        வினோச்சான் முத்தையா     நீலாய், நெகிரி 
2.         சி. சிவதாரண்யா         யாய்யா, ஜோகூர் பாரு 
3.         வி. பினா ஸ்ரீ             யாய்யா, ஜோகூர் பாரு
4.         வ. பிரதீப்             லாபிஸ் ஜோகூர் 
5.         யு. கவிராஜ்             யாய்யா, ஜோகூர் பாரு
6.         திவாஷினி மணிக்குமரன்     யாய்யா, ஜோகூர் பாரு
7.         வி. டிவினா             யாய்யா, ஜோகூர் பாரு
8.         வா. கிருதிகா             யாய்யா, ஜோகூர் பாரு
9.         காவியமித்ரா ஜெயகோபி     யாய்யா, ஜோகூர் பாரு
10.         சு. கெளரித்தா            யாய்யா, ஜோகூர் பாரு
11.         நிரல்யா கிருஷ்ணன்         யாய்யா, ஜோகூர் பாரு
12.         தேவஸ்ரீ             யாய்யா, ஜோகூர் பாரு
13.         வி. அஸ்மித்தா         ஆலோர் காஜா மலாக்கா 
14.         ஸ்ரீ லிஷானேகா         செயிண்ட் ஜோசப் ஜோகூர் பாரு 
15.         யுக்தா விக்னேஸ்வரன்      யாய்யா, ஜோகூர் பாரு
16.         ச. தர்ஸ்வின்             யாய்யா, ஜோகூர் பாரு
17.         யாஷ்மித்ராசாய்        நீலாய், நெகிரி
18.         ஜனசிகா                  ஆலோர் காஜா மலாக்கா
19.         கு. தீரன்             லாபிஸ் ஜோகூர்
20.         மே. ஷர்ஜினி             லாபிஸ் ஜோகூர்

இப்போட்டியின் இறுதிச் சுற்றில் நேரடியாக வந்து கலந்துக்கொள்ளும் மாணவர்கள் அங்கு கொடுக்கப்படும் தலைப்புகளில் கட்டுரை எழுத வேண்டும். 

வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரி. ம. 1,000.00, இரண்டாம் பரிசு ரி. ம. 700.00, மூன்றாம் பரிசு ரி. ம. 500.00.  அதோடு, 5 ஆறுதல் பரிசாக ரி. ம.  100.00 வீதம் வழங்கப்படும். முதல் பரிசுகளைப் பெறும் மாணவர்களின் பள்ளிகளுக்கும் வெற்றிக் கோப்பைகள், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும்.

நேரடியாக போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு டீ- சட்டைகளும் சான்றிதழும் வழங்கப்படும். அதோடு நிர்ணயிக்கப்பட்ட போக்குவரத்து செலவுத் தொகை ரி. ம.100, உணவு ஆகியவையும் கொடுக்கப்படும்.

முதல் கட்டமாக மத்திய மண்டலத்திற்கான போட்டி கோலாலம்பூர் பிரிக்பிள்ஸ் விவேகானந்த தமிழ்ப்பள்ளியில் எதிர்வரும் ஜூன் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 க்கு நடைபெறும்.  ம.இ. காவின் தேசிய துணைத் தலைவர் இலக்கியச் செல்வர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமை வகித்து பரிசுகளை வழங்குவார்.  வட, தெற்கு மண்டலங்களுக்கான போட்டியின் தேதி பிறகு அறிவிக்கப்படும்.

மேல் விபரம் பெற வாரியத்தின் செயலாளர் திரு. பத்மநாபன் (012-6589252) அல்லது அறங்காவலர் திரு. பரமசிவம் (011-35231429) ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்  என்று தமது பத்திரிகைச் செய்தியில் வாரியத்தின் செயலாளர் திரு. பத்மநாபன் குறிப்பிட்டார்.  மின்னஞ்சல் முகவரி: tamilschoolCAF@gmail.com.

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset