நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்னியல் சிகரெட்டை முழுமையாகத் தடை செய்வது குறித்து இன்னும் பரிசீலிக்கப்படுகிறது: சாரணி முஹம்மத்

ஈப்போ:

பேராக்கில் வேப் எனப்படும் மின்னியல் சிகரெட் விற்பனையை முழுமையாகத் தடை செய்வது குறித்து இன்னும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அம்மாநில மந்திரி பெசார்  டத்தோஸ்ரீ சாரணி முஹம்மத் கூறினார்.

மாநில அரசு மின்னியல் சிகரெட் பொருட்களைத் தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றார் அவர். 

மாநில நிர்வாகக் குழு கூட்டங்களில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தாலும் இது தொடர்பாக ஒரு முடிவு மேற்கொள்ள மேலும் ஆழமான மதிப்பாய்வுகள் அவசியம் என்று மந்திரி புசார் சாரணி முஹம்மத் குறிப்பிட்டார். 

மின்னியல் சிகரெட்டை முழுமையாகத் தடை செய்வதற்கு முன் அதனை விற்பனை செய்யும் வணிகர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர். 

மாநில சுகாதாரப் பிரிவு ஆட்சி குழு உறுப்பினர் ஏ. சிவனேசன், இந்த விஷயத்தை சுகாதாரம் மற்றும் வணிகக் கண்ணோட்டங்களில் இருந்து மறுபரிசீலனை செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார். 

கூடுதலாக, இந்த விவகாரத்தை மேலும் விவாதிக்க மின்னியல் சிகரெட் விற்பனையாளர்கள் சங்கங்களிடமிருந்து மாநில அரசு கோரிக்கைகளைப் பெற்றுள்ளது.

வரவிருக்கும் மாநில நிர்வாகக் குழு கூட்டங்களில் அனைத்து பரிசீலனைகளும் முழுமையாக ஆராயப்பட்டு விவாதிக்கப்பட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset