
செய்திகள் மலேசியா
ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரபல நடிகர் கைது
கோலாலம்பூர்:
ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரபல நடிகரை போலிசார் கைது செய்தனர்.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் பாலியல், பெண்கள், குழந்தைகள் பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் சித்தி கம்சியா ஹாசன் இதனை உறுதிப்படுத்தினார்.
சிலாங்கூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல நடிகரும் பாடகருமான அவரை போலிசார் கைது செய்தனர்.
17 வயது பாதிக்கப்பட்ட பெண், தான் பணிபுரிந்த ஒரு ஓட்டலில் சம்பந்தப்பட்ட கலைஞரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
அறிமுகத்திற்குப் பிறகு அவர்கள் பல முறை சந்தித்துள்ளார்.
பல சந்திப்புகளுக்குப் பிறகு, சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை ஒரு ஹோட்டலுக்கு சந்திக்க அழைத்துச் சென்றார்.
அப்போது சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படுகிறது.
இக்குற்றத்தின் அடிப்படை அவர் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டார்.
பின் சந்தேக நபர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm