
செய்திகள் மலேசியா
வறட்சி காலத்தில் சிலாங்கூரில் நீர் விநியோகம் தடைப்படக்கூடாது: டாக்டர் சுரேந்திரன்
காஜாங்:
வறட்சி காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் நீர் விநியோகம் தடைப்படக்கூடாது.
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் இதனை வலியுறுத்தினார்.
இப்போது மிக கடுமையான வெயிலால் வறட்சி ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
இருப்பினும் சிலாங்கூர் மாநில மக்களுக்கு போதுமான குடிநீர் இருப்பதை சிலாங்கூர் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
சிலாங்கூர் மாநிலத்தில் வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கோடைக் காலம் அல்லது தென்மேற்கு பருவமழையின் போது போதுமான அளவு நீர் விநியோகம் இருக்கும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் கூறியிருப்பதை வரவேற்கிறேன்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஏழு முக்கிய நீர்த்தேக்கங்களும் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான நீர் கொள்ளளவைப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுவரை அனைத்து அணைகளிலும் நீர் கொள்ளளவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நாம் வறட்சி காலத்தை எதிர்கொண்டாலும் நீர் விநியோகத்தில் எந்த இடையூறும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை சிலாங்கூர் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதோடு வறட்சி காலத்தில் நீர் தேக்கங்களில் மாசு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm