நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

FRU வாகன விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்: அந்தோனி லோக்

புத்ரா ஜெயா: 

கடந்த மாதம் ஒன்பது சேமப்படை உறுப்பினர்களை உட்படுத்திய வாகன விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 15-ஆம் தேதி விசாரணை மேற்கொள்ள 
சிறப்பு பணிக்குழு நியமிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதையும் அந்தோனி லோக் குறிப்பிட்டார்.

Tan Chee Kee தலைமையில் நியமிக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவில் ஜொகூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் Hasni Mohammad மற்றும் பாஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  Khairil Nizam Khirudin ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

சிறப்பு பணிக்குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த விபத்து தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன் விசாரணை அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பேன் என்று அந்தோனி லோக் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

முன்னதாக, மே 13-அம் தேதி தெலுக் இந்தான் சித்திரை பௌர்ணமி விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த 9 சேமப்படை உறுப்பினர்கள் வீடு திரும்போது ஜாலான் சிகஸ்-சுங்கை லாம்பாமில் அவர்களது வாகனம் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் 9 சேமப்படை உறுப்பினர்கள் உயிரிழந்தனர். .

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset