நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அமைச்சரவையில் இணைய விருப்பமில்லை: கைரி

கோலாலம்பூர்:

மடானி அமைச்சரவையில் இணைய விருப்பமில்லை என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.

கெஅடிலான் தேர்தலில் ரபிஸி ரம்லி, நிக் நஸ்மி ஆகியோர் தோல்வி கண்டனர்

இதனால் அவர்கள்  அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இதை அடுத்து கைரி அம்னோவின் சார்பில் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்ற ஆரூடம் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது நான் அமைதியாஎ வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.

இந்த அமைதியான வாழ்க்கையைச சீரழிக்கும் வகையில் மடானி அமைச்சரவையில் இணைவதற்கு எனக்கு துளியும் விருப்பமில்லை  என்று அவர் கூறினார்.

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு கட்சியின் கட்டுப்பாடுகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து, 

கைரி அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset