
செய்திகள் மலேசியா
10 சதவீதம் பணியாளர்களைக் குறைக்க பெட்ரோனாஸ் நிறுவனம் முடிவு
கோலாலம்பூர்:
கிட்டத்தட்ட 10 சதவீதம் பணியாளர்களைக் குறைக்க பெட்ரோனாஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெங்கு முஹம்மது தௌபிக் அஜீஸ் இதனை தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, சந்தை ஏற்ற இறக்கத்தின் எதிர்பாராத தாக்கம் அதன் லாபத்தில் ஏற்பட்டுள்ளது.
இதனால் செலவுகளைக் குறைக்க பெட்ரோனாஸ் தனது பணியாளர்களை சுமார் 10 சதவீதம் குறைக்கும்.
இந்த நடவடிக்கை 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பாதிக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்படும்.
நிறுவனத்தின் விரிவான மறுசீரமைப்புக்காக அனைத்து பதவி உயர்வுகளும் புதிய பணியமர்த்தல்களும் டிசம்பர் 2026 வரை முடக்கப்படும்.
பெட்ரோனாஸின் லாபம் கடந்த ஆண்டு 32 சதவீதம் சரிந்தது. முந்தைய ஆண்டு 21 சதவீதம் சரிவை சந்தித்தது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm