நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 சதவீதம் பணியாளர்களைக் குறைக்க பெட்ரோனாஸ் நிறுவனம் முடிவு

கோலாலம்பூர்:

கிட்டத்தட்ட 10 சதவீதம் பணியாளர்களைக் குறைக்க  பெட்ரோனாஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெங்கு முஹம்மது தௌபிக் அஜீஸ் இதனை தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, சந்தை ஏற்ற இறக்கத்தின் எதிர்பாராத தாக்கம் அதன் லாபத்தில் ஏற்பட்டுள்ளது.

இதனால் செலவுகளைக் குறைக்க பெட்ரோனாஸ் தனது பணியாளர்களை சுமார் 10 சதவீதம் குறைக்கும்.

இந்த நடவடிக்கை 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பாதிக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்படும்.

நிறுவனத்தின் விரிவான மறுசீரமைப்புக்காக அனைத்து பதவி உயர்வுகளும் புதிய பணியமர்த்தல்களும் டிசம்பர் 2026 வரை முடக்கப்படும்.

பெட்ரோனாஸின் லாபம் கடந்த ஆண்டு 32 சதவீதம் சரிந்தது. முந்தைய ஆண்டு 21 சதவீதம் சரிவை சந்தித்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset