நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெனாரா இல்ஹாமை எம்ஏசிசி மீண்டும் கைப்பற்றியது

கோலாலம்பூர்:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி மெனாரா இல்ஹாமை மீண்டும் கைப்பற்ற ஒப்புதல் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 

மறைந்த துன் டைய்ம் ஜைனுடினுக்குத் தொடர்புடைய மெனாரா இல்ஹாம் பறிமுதல் செய்யப்படுவதை உறுதிப்படுத்தினார்.

இந்தப் பறிமுதல் ஜூன் 4, 2025 தேதியிட்ட பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் 2001 (AMLATFPUAA 2001) இன் பிரிவு 51(1) இன் கீழ் அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சட்டம் 593) இன் பிரிவு 376(3) இன் கீழ் பறிமுதல் நடவடிக்கைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

மேலும், MACC வழங்கிய தகவலின்படி, கட்டிடம் AMLATFPUAA 2001 இன் துணைப்பிரிவு 4(1) இன் கீழ் ஒரு குற்றத்துடன் தொடர்பு இருப்பதாக அரசு துணை வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.

எம்ஏசிசி-யால் மெனாரா இல்ஹாம் கைப்பற்றப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

எம்ஏசிசி கோரியபடி டைம் தனது குடும்பத்தின் நிதி சொத்துக்களை அறிவிக்கத் தவறியதை அடுத்து, டிசம்பர் 18, 2023 அன்று முதல் பறிமுதல் செய்யப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset