நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இல்ஹாம் கோபுரத்தை எம்ஏசிசி கைப்பற்றியதை எதிர்த்து வழக்கு தொடர துன் டாயிம் மனைவி உத்தரவு

கோலாலம்பூர்:

இல்ஹாம் கோபுரத்தை எம்ஏசிசி மீண்டும் கைப்பற்றியதை எதிர்த்து வழக்கு தொடர மறைந்த துன் டாயிம் மனைவி உத்தரவிட்டுள்ளார்.

நய்மா காலித் வழக்கறிஞர்களான ராஜேஷ் நாகராஜன், சச்ப்ரீத் ராஜ் சிங் சோஹன்பால் ஆகியோர் இதனை தெரிவித்தனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் மீண்டும் அக்கட்டிடத்தை கைப்பற்றியது பெரும் தொந்தரவாக உள்ளது

இது பழிவாங்கும் செயலாகும். சட்டவிரோதமானது. எம்ஏசிசியின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என நய்மா கருதுகிறார்.

எம்ஏசிசி இக்கட்டிடத்தைக் கைப்பற்றுவது இது இரண்டாவது முறையாகும்.

எம்ஏசிசி ஏற்கெனவே மெனாரா இல்ஹாமைக் கைப்பற்றி உள்ளனர். அதே நடவடிக்கைக்கான நியாயம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பினார்.

ஆகவே எங்கள் கட்சிக்காரர் சார்பாக, மெனாரா இல்ஹாமைக் கைப்பற்றியதை உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று அவர்கள் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset