நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன இங்கிலாந்து ஆடவரின் உடல் மின்தூக்கிச் சுரங்கத்தில் கண்டுபிடிப்பு

கோலாலம்பூர்:

தலைநகரில் காணாமல் போன இங்கிலாந்து ஆடவரின் உடல் மின்தூக்கிச் சுரங்கத்தினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

25 வயது ஜார்டன் ஜான்சன் டொய்லேவை  ஒரு வாரத்திற்கும் மேலாகக் காணவில்லை.

அவர் கடைசியாகச் சென்ற மாதம் மே 27ஆம் தேதி ஒரு மதுபான விடுதியில் தென்பட்டார்.

அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையும் அவரின் பெற்றோரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று கட்டுமானத் தளத்தில் மின்தூக்கிச் சுரங்கத்தினுள் ஓர் ஆடவர் கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது..

ஆடவரின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

உயரத்திலிருந்து விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் அவர் மாண்டதாகத் தெரிய வந்தது. அது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset